Saturday, November 6, 2010

இழப்பு !

கட்டிலோடு கயிறாய் ஒட்டிக்கிடக்கும் ஒரு உருவம்
ஆணா பெண்ணா என்று உணர முடியாத தோற்றம்
அருகில் இருப்பவர் யார் என்று அறிய முடியாத மயக்கம்
அம்மா அம்மா என்றழைக்கும் மகனின் குரல் !
நினைவோடு  இருக்கும்போது வரலையே நீ
என்று அங்கலாய்க்கும் தங்கையின் அழுகுரல்!
என்ன செய்வதென்று அதிர்ந்து நிற்கும் உறவினர்! 

தொப்புள்கொடி பந்தத்தில் ஓர் இடைவெளி !
எதை இழந்தோம் நாம்? எதை இழந்தோம்
கடவுள்கள் விற்பனைக்கு !


ரயில்வே ஸ்டேஷன் போகும்போது . . . .

பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது. . . .

நீங்கள் தினம் காணும் கடவுள்கள் நாங்கள்! 


வெள்ளை நிறத்தில்  உருவானோம் நேற்று 

வண்ணமாய் பாதைஓரம்  நிற்கின்றோம் இன்று.

கடவுள்கள் விற்பனைக்கு !


எங்களைப் படைத்த பிரம்மாக்களின்

பசியைப் போக்கமுடியாத

மானத்தை மறைக்கமுடியாத

வறுமையை ஒழிக்கமுடியாத

பரிதாபக் கடவுள்கள் நாங்கள் !


எங்களை வாங்கி உங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி 

எங்களைப் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட

 உங்களைப் பிரார்த்திக்கும் தெருஒரக் கடவுள்கள் நாங்கள் !

கடவுள்கள் விற்பனைக்கு!

Thursday, October 28, 2010

A dream come true!

Jothsna made it happen. 

That was a thought lingering in my mind for years. 
Finally 
in the comfort of the cool coach 
on the way to Kovai 
at the end of 
a tiring but satisfied day - 
gk's immortal thoughts born afresh.